(Plus*; The Holy quran says; .... man was created weak...TMQ 4:28)
“The (Islamic Think Tank) Scholars are the inheritors of the prophets” (Abu Dawud and Tirmidzi)/Working in partnership with Sri Lanka Think Tank-UK
Thursday 30 December 2010
Wednesday 29 December 2010
Monday 27 December 2010
Saturday 25 December 2010
கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு
அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.
இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை.
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” அல் குர்ஆன் 10: 90,91,92 (S.M.அப்துல்லாஹ்)
Tuesday 21 December 2010
Middle East Cleric Yusuf al-Qaradawi's silly thoughts & Qatar FIFA 2022 Vision
The FIFA announcement that Qatar is awarded hosting the 2022 World Cup represents the first time a Muslim country defeats the United States, the Doha-based Egyptian Middle East Cleric Yusuf al-Qaradawi (...?) said in his last Friday sermon. Read more
Sunday 19 December 2010
Wednesday 15 December 2010
Islaamum Indraiya Muslimkalum 1-2
1/2
2/2
Read more>>> on P. Jainulabdeen (Plus*) of TNTJ
(Plus*; the holy quran says;....the man was created weak...4:28)
Home Sri Lanka Think Tank-UK (Main Link)
2/2
Read more>>> on P. Jainulabdeen (Plus*) of TNTJ
(Plus*; the holy quran says;....the man was created weak...4:28)
Home Sri Lanka Think Tank-UK (Main Link)
Sunday 5 December 2010
வாழ்க்கைமுறை இயல்பும் மாற்றமும்
ஒவ்வொரு குடும்பமும் தனது உறுப்பினரை பின்வரும் வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபடுத்துவது வாழ்க்கைமுறையை நெறிப் படுத் துவதற்கு இலகுவாக அமையும்.
நான் யார்? எனக்கு வழி காட்டுபவன் யார்? பிரபஞ் சம்-அதிலுள்ளவை பற் றிய எனது பணி யாது? எனது வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண் டும்?
முதல் மூன்று வினாக்களும் கோட்பாடு சார்ந்தவை. அவற்றுக்கு அல்குர்ஆன், ஸுன்னா வுக்கூடாக ஏற்கனவே விடைகள் கொடுக்கப்பட்டுள் ளன. நான்கா வது வினா நடைமுறை சார்ந்தது. அதற்கான விடை அல்குர்ஆன் ஸுன்னா வில் கிடைப்பதோடு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சிந்தித்து வழிகாண வேண்டிய அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. வரலாற்றில் இப்பணியை இஜ்திஹாத் செய்துள்ளது. எமது பகுத்தறிவுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
நான் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வை எனது ‘இலாஹ்’ ஆக ஏற்றிருக்கிறேன். ஆதலால், ஏனைய மனிதர்கள் போல நான் வாழ முடியாது. நான் தனித்துவ மானவன். அதேநேரத்தில் தனித்தவனுமல்ல. சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் ஓர் உறுப்பினன். நான் விடக்கூடிய தவறுகள் என்னை மாத்திரம் பாதிப் பதில்லை; முழு முஸ் லிம் சமுதாயத்தையும் பாதிக்கச் செய்யும்.
அல்குர்ஆனும் ஸுன்னா வுமே எமக்கு வழிகாட்டுகின்றன. அல்லாஹ்வின் தூதரான நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்தில் வாழ்ந்து, அல்லாஹ் வின் வழிகாட்டலுக் கேற்ப, மனித சமூகத்துக்கான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். தனிநபராக நின்று, தனிநபருக்கான வழிகாட்டு தலையும், குடும்பத்தவராக அமர்ந்து குடும்ப வாழ்வுக்கான வழிமுறையை யும் காண்பித்திருக்கிறார்கள். ஸஹாபாக்கள் என்ற முன்னோடிச் சமூகத்தை உரு வாக்கி சமூகத்துக்கான வழிகாட் டுதலையும் வழங்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை முறை போன்றே அந்த ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையும் பதினைந்து நூற்றாண்டுகளாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது. ஏழையாக இருந்தாலும், செல்வந்தனாக இருந்தாலும், படித்தவனாக இருந்தாலும், பாமரனாக இருந் தாலும், சமூகத்தின் மேல் மட்டத் திலிருந்தாலும், கீழ் மட்டத்திலிருந்தாலும் அந்த ஸஹாபாக்கள் அத்தகைய வர்களுக்கு முன்னோடியாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் இரவில் துறவிகளாகவும், பகலில் குதிரை வீரர்களாகவும் தென்பட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வுடனான உறவை துண்டிக்கவுமில்லை. பொது மக்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்ளவுமில்லை.
பிரபஞ்சத்தைப் பொறுத்த வரை, அது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டது. அவன், ரப்புல் ஆலமீன்-பிரபஞ்ச ரட்சகனாக உள்ளான். மனிதனின் தேவைக் காகவே அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி யுள்ளான். அல்லாஹ்வின் பிரதிநிதியாக நின்று பிரபஞ்சப் பொருள்களைப் பரிபாலிப்பது, வளப்படுத்துவது, பாதுகாப்பது, பயன்படுத்துவது போன்றன அவனது பொறுப் பாக அமைந் துள்ளன. அதற்கான வழிகாட்டல்களும் வழங்கப் பட்டுள்ளன. மனிதர்கள் போன்றே விலங்குகள், பறவை கள், தாவரங்கள், ஏனைய உயிரி கள், பௌதீக பொருள்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் வின் படைப்புக்கள் என்பதால் அவற்றோடு நிச்சயமாக - அதன தன் உரிமைகளை வழங்கி நடப்பதற்கு மனிதன் கடமைப் பட்டுள்ளான். பௌதீக, பண் பாட்டுச் சூழலைப் பாதுகாப் பது அவனது கடமையாகும்.
எமது வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு அல்குர்ஆன் தருகின்ற மிகச் சுருக்கமான விளக்கம், அல் லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய மக்களுக்கு அல் லாஹ்வின் தூதரிடத்தில் அழ கிய முன்மாதிரி இருக்கின்றது என்பதாகும். ஆகவே, ஸீறா வைத் தெளிவாகப் படித்து நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி களை விளங்கி அவற்றை வாழ்வில் கடைப் பிடிப்பது தான் எமது வாழ்க்கை முறை யாகும். காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவிதமாக வாழ்க்கை முறையை - அடிப்படை நோக்கத்துக்கு (ஷரீஆ வுக்கு) முரணில்லாத முறை யில்-மாற்றிக் கொள்ள முடியும் என்பதை அவர் களது வாழ்வும் ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையும் எடுத்துக் காட்டுகின் றன.
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவற்றை எந்தளவு அறிந்தும் விளங்கியும் வைத்துள்ளார்களோ,அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறை யும் சீராக அமையும். எப்படியும் வாழ லாம் என்ற நிலையிலிருந்து இப்படித் தான் வாழ வேண்டு மென்ற உறுதிப்பாட்டிற்கு அவர்கள் வந்துவிட வேண்டும். இதனை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்துக் கருத்துப் பரிமாற வேண்டிய தேவை உள்ளது.
இஸ்லாத்தில் பர்ளு ஐன், பர்ளு கிபாயா என்ற இரு வகையான கடமைகள் உண்டு. ஒரு தனிமனிதன் - மாணவனா கவோ, மாணவியாகவோ இருந்து - கற்கக் கூடிய கால கட்டத்தில் இல்லற வாழ்வு பற்றிக் கற்றுக் கொள்வது பர்ளு கிபாயாவாகும். இல்லற வாழ் வில் நுழையும்போதும், நுழைந்த பின் னரும் கற்றுக் கொள்வது பர்ளு ஐனாகும். இக்கற்றல் முறை இஸ்லாம் அங்கீகரித்த எந்த வகையிலும் அமையலாம். இஸ்லாம், கற்பதற்கென ஒரு கால கட்டத்தை வரையறுக்கவில்லை. வாழ்க்கை நீடித்த கல்வியை உல குக்கு அறிமுகப் படுத்திய இஸ்லாம் மரணிக்கும் வரை கற்க வேண்டுமென வலி யுறுத்துகிறது. ஆதலால், மண முடித்த பின்னர் கற்பது வெட்கப்படக் கூடியதல்ல;மெச்சத்தக்கது.
ஆதலால், இம்மை, மறுமை விமோசனத்துக்காக குடும்ப வாழ்வு பற்றிக் கற்றுக் கொள் வதை கௌரவமாகக் கருதுதல் வேண்டும். (MHM Nalir (Plus*)-Weligama)
முஸ்லிம்களின் முதலாவது சக்தி
அஷ்ஷெய்க் ராஷித் கன்னூஸி டியூனீசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1941 ஆம் ஆண்டு டீயூனீசியாவின் தெற்கில் அமைந்துள்ள ஹாமா எனும் கிராமத்தில் இவர் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனது கிராமத்திலே பூர்த்தி செய்த இவர் உயர்கல்விக்காக காபஸ் நகருக்கு சென்றார். பின்னர் டியூனீ ஸியாவின் தலைநகரில் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பிறகு எகிப்து, பிரான்ஸ், சிரியா போன்ற நாடுகளில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். சிரியாவின் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
1960 களின் பிற்பகுதியில் டியூனீசியாவிற்குத் திரும்பிய அஷ்ஷெய்க் ராஷித் அல் கன்னூஸி அங்கு நஹ்லா எனும் இஸ்லாமிய இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அரசியல், தஃவா செயற்பாடுகளுக்காக 1981 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
தற்போது லண்டனில் வசித்துவரும் ஷெய்க் ராஸித் அல் கன்னூஸி இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து ஆழ்ந்த பரீட்சயமுடையவர். அது தொடர்பாக பல நூற்களையும் பல விரிவுரைகளையும் நிகழ்த்தியவர். இக்கட்டுரைத் தொடர் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைகின்றது.
எமது முஸ்லிம் சகோதரர்க ளுக்காக மறைவாக இருந்து கேட்கப்படும் துஆக்கள் அங்கீக ரிக்கப்படும். இந்த வழிமுறையை அல்குர்ஆன் எமக்குக் கற்றுத் தருகின்றது. உம்மி மக்தூம் (றழி) யின் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள், நபி (ஸல்) அவர்கள் அவரைப்பார்த்து முகம் கடுகடுத் தார். அது பிழை என்பதை அல் லாஹ் சுட்டிக் காட்டினான். "ஒரு குருடர் வந்ததற்காக முகம் கடு கடுத்தார், புறக்கணித்தார்" என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர் களைக் கண்டித்தான்.
இதன் மூலம் அவர்களுக்கு மட்டுமல்ல, பின்னால் வருகின்ற முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அல்லாஹ் ஒரு பாடத்தைக் கற் றுக் கொடுத்தான். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் முக்கிய தலைவர்களோடு பேசிக் கொண் டிருந்தார். அவர்கள் இஸ்லாத் தில் இணைந்துக்கொண்டால் அது பெரும் பலமாக மாற முடி யும் என்று கருதினார். இது உண் மையில் மிக முக்கியமானது, அனுமதிக்கப்பட்ட ஒன்று.
ஆனாலும் அவ்வாறு முக்கி யஸ்தர்களுடன் பேசுவதன் கார ணமாக, அவர் களை இஸ்லாத் தின்பால் அழைக்கின்ற தஃவா பணியில் இருக்கின்ற போதும் கூட அவர்களை விட தாழ்ந்த முஸ்லிம்களை அல்லது பௌதீக ரீதியாக தாழ்ந்த முஸ்லிம்களைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு படித்துக் கொடுப்பதை விட்டு பராமுகமாக இருப்பது கூடாது என்பதை அல்லாஹ்தஆலா அந்த சம்பவத்தின் மூலமாக எம் மனைவருக்கும் கற்பிக்கின்றான்.
இந்த உண்மையின் காரண மாகத்தான் நான் உங்களிடம் பிரார்திக்குமாறு கேட்கிறேன் உங்களில் இருக்க கூடிய பலரின் பிரார்த்தனையை அல்லாஹுத் தஆலா ஏற்றுக்கொள்வான். உங்களில் இருக்க கூடிய பலரின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க முடியும். உங்களில் இருக்க கூடிய பலரினால் இன்னும் பலருக்கு உதவிகள் கிடைக்க முடியும், இஸ்லாமிய சமூகத்திற்கு வெற்றிகள் கிடைக்க முடியும். இந்த வகையில்தான் உங்களிடத்தில் மிகப் பெரிய நன்மை இருப்ப தாக நான் கூறுகிறேன்.
எனவேதான், நீங்கள் என்னை விட உயர்ந்தவர்களாக இருக்கின் றீர்கள் என்று நான் சந்தேகம் இல்லாமல் கருதுகிறேன். உங்க ளில் ஒருவரின் பிரார்த்தனை எனக்கு மிகப் பிரயோசனமாக அமையும். இந்த ஈமானிய கண்ணோட்டத் தில்தான் நான் உங்களுக்கு ஆரம்பத்திலேயே கூறினேன். நான் உங்களை சந்திப்பது நீங்கள் என்னை சந்திப் பதைவிட எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்திற்கு அதன் பலத்தைக் காட்டக் கூடிய சில அம்சங்கள் இருக்கின்றன. ஏனைய வேறு எந்த சமூகத்திற்கும் இல்லாத பலம் இந்த சமூகத்திற்கு காணப்படுகின்றது. இந்த கருத்தை நிராகரிப்பாளர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. எனவேதான் நிராக ரிப்பாளார்கள் இஸ்லாமிய சமூகத்தை எதிர்கொள்வதற்காக, அவர்களைத் தோற்கடிப்பதற் காக எல்லா வகையான பௌதீக வளங்களையும் திரட்டுகிறார் கள், அவ் வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை வீழ்த்துவதற்கு உழைக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய சமூகத்தை வேறுபடுத்திக் காட்டுகின்ற, இந்த சமூகத் தின் பலத்தை பற்றி அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். இந்தோனேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக 50 வருட திட்டம் ஒன்றை நிராகரிப் பாளர்கள், மேற்கத்தேய உலகம் திட்டமிட்டது. 20ம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் அத்திட் டத்தை தீட்டியது. அதனை நடை முறைப்படுத்துவதற்காக மிகப் பெருந்தொகையான செல்வங் களை அவர்கள் திரட்டினார்கள். அதற்கென்று பலவகையான வசதி களையும் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அப்போது இந்தோனேசியா காலனித்துவ நாடுகளில் ஒன்றாக இருந்தது. இப்போதும் கூட கால னித்துவத்திற்கு உட்பட்ட நாடா கத்தான் அது இருக் கிறது. உண்மையில் இஸ்லாமிய உலகம் விடுதலை பெற்றுவிட்டது என்று சொல்பவர்கள் பொய்யையே சொல்கிறார்கள். இஸ்லாமிய உலகம் இன்று வரையில் காலனித்துவத் திற்கு உட்பட்டதாகத்தான் இருக் கிறது. ஆனால் ஒரு வித்தியாசமான அமைப்பு. இந்த 20 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தக் கூடிய பொருத்தமான காலனித்து வமாக இஸ்லாமிய உலகம் இன் றும் காணப்படுகிறது.
உண்மையில் இந்தவகையில் தான் இந்தோனேசியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் அல்லது ஐம்பது வீதமாவது அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ப தற்காக பெருந்தொகையான செல்வங்களை செலவழித்தார் கள், கிறிஸ்தவ பாதிரிமார்களை அந்த நாடு முழுக்கப் பரப்பிவிட் டார்கள், பல வைத்தியர்கள், அறிஞர்களையும் அங்கு குவித்தார்கள். அந்த கிறிஸ்தவ பிரச்சார கர்கள் இந்தோனேசியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி னார்கள். இந்தோனேசியாவின் காடுகளிலெல்லாம் கூட அவர் கள் சுற்றித் திரிந்தார்கள். 50 வரு டங்கள் கழிந்தது.
ஆனால், அந்த நாட்டில் ஒரு சிறு தொகையினரைக் கூட மாற்ற முடியாமல் போனது. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தான் அப்போது அவர்க ளால் மாற்ற முடிந்தது. அனைத்து வகையான வசதிகள் இருந்தும் கூட வெற்றியை அடைவதற்கு அனைத்து வகையான திட்ட மிடல்கள் இருந்தும் கூட ஏன் இதில் அவர்கள் தோற்றார்கள்?இதனை அவர்கள் சிந்தித்தார் கள். எனினும், முஸ்லிம் சமூகத் தில் காணக்கூடிய வெற்றிக்கான காரணத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர்கள் இந்தோனே சியா வின் ஒரு துண்டையாவது பௌதீக ரீதியாகவாவது எங்களு டையதாக் கிக் கொள்வோம் என்றுதான் இந்தோனேசியாவின் ஒரு பகுதியைப் பறித்து ஒரு கிறிஸ்தவ நாடாக உருவாக்குவதற்கு அவர்கள் ஈடுபட்டு வருகிறார் கள்.
இப்படியாக பௌதீக ரீதியான இலக்கில் ஒரு சிறு பகுதியையே அடைய முடிந்ததே தவிர அவர்களின் திட்டமிடல் முழுத் தோல்வியிலேயே முடிந் தது. முஸ்லிம் சமூகத்தில் காணப்படு கின்ற அந்த முதலாவது பலம் தான் ஈமானியப் பலமாகும். அல்லாஹ்வோடு முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற நெருக்கமான பலம் தான் அந்த பலமாக அமை கின்றது. இதன் காரணமாகத் தான் எல்லாவிதமான பௌதீக வளங்களும் அதற்கு முன்னால் தோற்றுப் போய்விடுகிறது என்பதை நாங்கள் காண்கிறோம். இது முஸ்லிம் சமூகத்தின் முதலாவது பலம்.
முஸ்லிம் சமூகத்தின் இரண்டாவது பலம் அவர்களிலே காணப்படுகின்ற வறுமை, எளிமையான வாழ்க்கை. இதுதான் இஸ்லாமிய சமூகத்தின் இரண் டாவது பலம் என்பதை நாம் காண்கின்றோம். வறுமை, கஷ்டமும், துன்பமும் நிறைந்ததுதான். ஆனாலும் இது இந்த சமூகத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய பலம் என்று நான் கருதுகின்றேன். இதனை இறைதுதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "வறுமையைப் பற்றி உங்கள் மீது நான் பயப்பட வில்லை, உலகம் உங்களுக்கு மிக விரிவாக தரப்பட்டு அந்த உலகத்தையே பெறு வதிலேயே நீங்கள் போட்டி போட்டு அழிந்து விடுவீர்களோ என்பதில் தான் நான் பயப்படுகிறேன்"
நபி (ஸல்) அவர்களின் இந்த கருத்திலிருந்து நான் சொல்கி றேன் முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய பலம் வறுமையும் எளிமை யான வாழ்க்கையுமா கும். ஆனால், இந்த பலத்தை எவ்வாறு எமது வெற்றிக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வது என்பதுதான் பிரச்சினையாக அமைகிறது. ஈமானுடன் தொடர்புபட்ட சில அடிப்படைப் பிரச்சினைகளை உங்களுக்கு கூறியதன் பிறகு, நாம் தலைப்புக்குச் செல்வோம்.
"வறுமை பற்றி நான் உங்களுக்கு பயப்படவில்லை..." என்ற இறை தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன கருத்தை ஒரு குறிக் கோளாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இருந்து வந்த நன் மாராயமாக நீங்கள் கொள்ள வேண் டும்.
உண்மையில் ஏன் அவர்கள் சொன்னார்கள், உண்மையில் இஸ்லாமிய சமூகத்தில், இயக் கங்களில் கடுமையாக உழைக் கின்ற அங்கத்தவர்கள் கூட இதற் குத்தான் பயப்படுகிறார்கள். தேவை பற்றித்தான் சிந்திக்கிறார் கள். எனக்கு இவ்வாறான தேவை இருக்கிறது, அதனை எப்படி நிறைவேற்றிக் கொள்வேன் என் பது பற்றித்தான் யோசிக்கிறார் கள். இஸ்லாமிய அமைப்பும் கூட இவ்வாறுதான் சிந்திக்கிறது, எங்களுக்கு ஒரு மத்திய நிலையம் தேவை, நிறைய பள்ளிகள் தேவை, நிறைய வாகனங்கள் தேவை இப்படி தேவை என்ற பட்டியல் எங்களிடத்தில் நீண்டு கொண்டே செல்கின்றது. இவைகள் எல் லாம் இருக்கும் என்றால் நாங்கள் இவ்வாறு எல்லாம் செய்வோம் என்று சிந்திக்கின்றோம்.
அல்லாஹ் எங்களைப் பற்றி மிகவும் அறிந்தவன் எங்களுக்கு இத்தகைய செல்வங்கள் திறந்து கொடுக்கப்பட்டால் என்ன நடக் கும் என்பதை அவன் நன்கறிந் தவன். எனவேதான், நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு வறுமை வருவதைப் பற்றி நான் பயப்படவில்லை என்றார்கள். சில வேளை களில் அறிஞர்களும் கூட இந்த வறுமையைப் பற்றி கவலைப் படுகிறார்கள். இதனை எப்படி நீக்குவது என்று அதிகமாக சிந் திக்கிறார்கள். ஆனால், நான் நினைக்கிறேன் அல்லாஹ் அவ னுடைய ஏற்பாட்டின் படி இஸ் லாமிய சமூகத்தின் மீது இந்த வறுமையை ஏற்படுத்தி இருக்கி றான்.
இதன் பொருள் வறுமைக்கு நாம் பணிந்துவிடுவதல்ல. எங்க ளுடைய பொரு ளாதார வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொள் ளக் கூடாது என்றும் நான் சொல்ல வில்லை. கண்டிப்பாக எங்களு டைய பொருளாதார வாழ்க் கையை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதனை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதனை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பொருளா தார நிலை குறித்து நாம் கவலைப் படக் கூடாது. அதன் கலக்கம் எங்களுடைய உள்ளத்தில் தோன்றி விடக் கூடாது என்பதை தான் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகின் றேன். (Meelparvai Plus*)
Subscribe to:
Posts (Atom)